Saturday 14 September 2013

எழுத்து


தமிழ் எழுத்துகளில் வளைவுகளும் சுழிவுகளும் மிகுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன? நம்முடைய முன்னோர்கள் பலகையிலும் காகிதத்திலும் எழுதவில்லை. பனை ஓலையில் இரும்பு எழுத்தாணிகொண்டு எழுதினார்கள். அதில் எழுதும்போது, ஓலை கிழியாமல் இருக்கவேண்டுமானால், இப்படி வளைவுகளும் சுழிவுகளும் இருந்தால்தான் எழுத முடியும்.


திருவள்ளுவர் எழுதிய முறை வேறு. நம் எழுத்துகளைப் பார்த்துவிட்டு, இவை வேறு மொழியைச் சார்ந்தவை என்று கூட எண்ணலாம். மரம் என்பதை ப்ரப் என்று நாம் படிப்போம்.

ம என்ற எழுத்தைப் போலவே, பல எழுத்துகள் உருவம் மாறியுள்ளன. தொல்காப்பியம் என்ற பழைய இலக்கண நூலில் எ ஒ என்ற இரண்டு எழுத்துகளுக்கும் புள்ளி உண்டு என்று சொல்லியிருக்கிறார். புள்ளி இல்லாவிட்டால் அவற்றை ஏ ஓ என்று பழங்காலத்தில் படிப்பர். எழு என்று எழுதுவதை அந்தக் காலத்தில் ஏழு எனெற் படித்தார்கள். இது போன்ற மாற்றங்கள் யாரால் உருவாக்கப்பட்டது ?

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே பெஸ்கி என்ற பாதிரியார் ஒருவர் இத்தாலி தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தார். அவர் தமிழ் கற்றுக் கொண்டார். வீரமா முனிவர் என்று தமிழ்ப் பெயரும் வைத்துக் கொண்டார். அவர் செய்த மாறுதல்தான் இன்று நாம் காணும் எ ஏ ஒ ஓ எழுத்துகள்.

No comments:

Post a Comment