Thursday 5 September 2013

அடையாளம்

அடையாளம் - முனைவர் சீதா லட்சுமி

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதாவது காலக்கட்டத்தில் தேடுவது அவர்களது தத்தம் அடையாளங்களைத்தான்.

இன்று நான் படித்த முகநூல் கட்டுரை இந்த அடையாளத்தைப் பற்றியே தலைப்பாகக் கொண்டிருந்தது. எழுத்தாளர் முனைவர் சீதா லட்சுமி அவர்கள். அதனாலன்றோ அவரின் அடையாளம் மொழி சார்ந்தே எழுதப்பட்டிருந்தது.

அடையாளம் என்ற சொல்லில் பல அர்த்தங்களை நாம் காணலாம். இவர்களின் எழுத்தைப் படிக்கும் போது, திரு கண்ணப்பிரான் அவர்கள் எழுதிய நாடோடிகள் என்ற சிறுகதைதான் என் நினைவிற்கு வந்தது. மொழி, பண்பாட்டுச் சிதைவு ஏற்பட்டு மனிதர்கள் தத்தம் அடையாளங்களை இழந்து தேடலில் அலைவதே இன்று வளர்ந்து வரும் அவல நிலை.

பல குடும்பங்களில் இன்று தமிழைவிட ஆங்கில பேச்சே மதிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் நம் மொழி, தமிழன் என்பதே நம் அடையாளம் என்பதை வலியுறுத்தி இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் முனைவர் சீதா அவர்கள்.

நம் சிங்கையில் நாம் கட்டாயமாக பள்ளிகளில் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதால், இந்த மொழி, கலாச்சார சிதைவு விரைவில் நிகழக் கூடிய நிலைக்குத் தள்ளப்படப் போவதில்லை. அதற்குள் உலகம் முழுவதும் தமிழ்த் தாயே நவீனமயமாகக் காட்சியளித்திடுவாள்.

அதற்காக எப்பொழுதும் தமிழை எளிமைப்படுத்துவதும் சிறப்பான செயல் அல்ல. மொழியைக் காப்பாற்றுவதன் கடமை நம் கைகளிலே உள்ளது. இது நம் மொழி என்ற அந்த உணர்ச்சிகரமான எழுத்தை இதில் காணலாம்.

இவர் கூறிய இரண்டு செய்திகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. ஒன்று குழந்தைகள் தங்களது மழலைப் பேச்சில் பெற்றவர்களை அம்மா அப்பா என்று அழைப்பது. பிள்ளைகள் வாய் திறந்து தமிழ் பேசவில்லை என்பதால் அதற்குப் புரியவில்லை என்று தவறாக எண்ணுவதே ஆகும்.

தன் அடையாளத்தை குழந்தைகள் கண்டுபிடித்துப் புரிந்துகொள்வதே ஓர் இனிமையான அனுபவமாகும். தான் கொண்டாடும் பண்டிகைகள், அதன் காரணங்கள், பாட்டிக் கதைகள் என புது புது செய்திகளை உள்வாங்கிக் கொள்ள முடியும். அக்குழந்தையின் சிந்தனைத் திறனையும் மேலும் இவை வளமூட்டும் என நல்ல கருத்துகளை வெளிக்கொணர்ந்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி.

ஐஸ்வர்யா

No comments:

Post a Comment