Tuesday 10 December 2013

ருத்திராட்சப் பூனையின் ஆசை



ருத்திராட்ச மாலை கையிலே
எண்ணிக்கொண்டு ஜபித்தான்
கடவுளை நினைத்து


உன்னைச் சரணடைந்தேன்
என்று பாடியே
அவன் மக்களை வசீகரித்தான்


கண்களில் வலைகள் வரைந்து
தன் புகழ் பாட வைத்தான்


பாட்டின் ஓசையிலே
ஆசை தூண்டியதோ


தன் புகழ் பரவியும்
ஏனோ இதயம் துடிக்கிறதோ


பெண்ணைக் கண்டு
அவன் மனம் ஏங்குதடி


ஆசைக் கொண்டு
வசியம் செய்தானடி


அவள் தன் பக்கம்
கடவுளை மறந்தான்


காம ஆசையில்
தன்னை மறந்தான்


மறந்து முக்தி அடைந்தான்
 அவன் சில்மிஷம்

இன்று நம் கையிலே
 நப்பாசைப் பட்டு

மீண்டும் தன்னை மறந்தான்

No comments:

Post a Comment