ருத்திராட்ச மாலை
கையிலே
எண்ணிக்கொண்டு
ஜபித்தான்
கடவுளை நினைத்து
உன்னைச் சரணடைந்தேன்
என்று பாடியே
அவன் மக்களை
வசீகரித்தான்
கண்களில் வலைகள்
வரைந்து
தன் புகழ் பாட
வைத்தான்
பாட்டின் ஓசையிலே
ஆசை தூண்டியதோ
தன் புகழ் பரவியும்
ஏனோ இதயம்
துடிக்கிறதோ
பெண்ணைக் கண்டு
அவன் மனம் ஏங்குதடி
ஆசைக் கொண்டு
வசியம் செய்தானடி
அவள் தன் பக்கம்
கடவுளை மறந்தான்
காம ஆசையில்
தன்னை மறந்தான்
மறந்து முக்தி
அடைந்தான்
அவன் சில்மிஷம்
இன்று நம் கையிலே
நப்பாசைப் பட்டு
மீண்டும் தன்னை
மறந்தான்
No comments:
Post a Comment